சென்னா ரெட்டி – ஜெயலலிதா மோதலின் கதை!
1995 ஏப்ரல் 1. சனிக் கிழமை முட்டாள்கள் தினத்தில்…
சென்னை சாந்தோம் ஜனதா கட்சி அலுவலகத்தில் சுப்பிரமணியன் சுவாமியின் பிரஸ் மீட்டுக்கு தேதி குறிக்கப்பட்டிருந்தது. ’அதிரடியாக எதையாவது சொல்லி பரபரப்பைக் கிளப்புகிறவர் சுப்பிரமணியன் சுவாமி’ என்பது ஊருக்கே தெரிந்தது. அப்படிதான், ’வழக்கமான அரசியல் செய்தியாக இருக்கும்’ என நினைத்து பத்திரிகையாளர்கள் வந்திருந்தார்கள். ஆனால், அன்றைக்கு சுவாமி சொன்ன தகவல், இந்தியா ஊடகங்களுக்கான தலைப்பு செய்தி !
“முதலமைச்சர் ஜெயலலிதா மீது வழக்குத் தொடர, ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி அளித்துவிட்டார்'' என்ற சிரித்துக் கொண்டே அதிர்ச்சி தகவலைச் சொன்னார் சுப்பிரமணியன் சுவாமி. ’’ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினத்தில் சுவாமி பிரஸ் மீட் நடத்தி, நம்மை ஏமாற்றப் பார்க்கிறார்’’ என நிருபர்கள் கமெண்ட் அடித்தனர். உடனே, சென்னா ரெட்டி கையெழுத்திட்ட அனுமதிக் கடிதத்தின் நகலைச் செய்தியாளர்களிடம் சுவாமி கொடுத்த போது நிருபர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ’ஜெயலலிதா மீது கிரிமினல் வழக்கு. சுவாமிக்கு ஆளுநர் அனுமதி’ என்ற தலைப்பு செய்தி, அனைத்து பத்திரிகைகளிலும் கொட்டை எழுத்துகளில் வெளியானது.
’அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருக்கும் முதல்வர் ஜெயலலிதா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்’ எனச் சொல்லி, 1994 நவம்பரில் ஆளுநர் சென்னா ரெட்டியிடம் மனு அளித்திருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. அந்த மனு மீது சென்னா ரெட்டி நடவடிக்கை எடுக்காத சூழலில், வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார் சுவாமி. அந்த வழக்கில், ’1995 மே மாதத்துக்குள் முடிவை அறிவிக்க வேண்டும்’ என ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்திருந்தது. இதன் தொடர்ச்சியாகத்தான் சென்னா ரெட்டி அனுமதி அளித்தார்.
’’ஜெயலலிதா மீதான வழக்கு நேர்மையாக நடைபெற, முதல்வர் ஜெயலலிதா உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் விலகாவிட்டால் அரசியலில் தூய்மையைப் கடைப்பிடிக்க ஜெயலலிதாவை பதவியில் இருந்து நீக்கப் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவும் நடைபெறவில்லை என்றால் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்வேன்’’ எனப் பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னார் சுவாமி.
’’முதல்வர் ஒரு அரசாங்க ஊழியர். அவர் மீதான புகாரை விசாரிக்க மத்திய, மாநில அரசுகள் நீதிபதியை நியமிக்கலாம். அவரே மாநில முதல்வராக இருப்பதால் மத்திய அரசு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்’’ எனச் சொன்ன சுவாமி, அதற்கு ஆதாரமாக மகாராஷ்டிராவில் நடந்த ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டார். ’’1982-ல் மகாராஷ்டிரா முதல்வர் அந்துலே மீது புகார் வந்தபோது, அவர் மீது வழக்குத் தொடர ஆளுநர் அனுமதித்தார். உடனே அந்துலேவை பதவி விலகும்படி காங்கிரஸ் தலைவராக இருந்த இந்திரா காந்தி கேட்டுக் கொண்டார். இதனால், அந்துலே பதவி விலகினார். ஜெயலலிதா பதவி விலகாவிட்டால் அவரை நீக்கி, சட்டப்பேரவையின் செயல்பாட்டை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும்’’ என்றார்.
ஜெயலலிதா மீது வழக்கு தொடர சுவாமிக்கு சென்னா ரெட்டி அனுமதி அளித்துத் தரப்பட்ட கடிதம் 1995 மார்ச் 25-ம் தேதி எழுதப்பட்டிருந்தது. அது, மார்ச் 31-ம் தேதி சுவாமியின் கைக்குக் கிடைத்தது. அடுத்த நாள் ஏப்ரல் 1-ம் தேதி அதனை ஊடகத்தில் பந்தி வைத்தார் சுவாமி. இரண்டரை பக்கம் கொண்ட அந்த கடிதத்தில் ஆளுநர் சென்னா ரெட்டி என்னதான் சொல்லியிருந்தார்?
’குற்றவியல் நடைமுறை விதி 197-வது பிரிவின் படியும் ஊழல் தடுப்பு சட்டத்தின் 19-வது பிரிவின் படியும் முதல்வர் ஜெயலலிதா மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு, 2.11.1993- ம் தேதி சுப்பிரமணியன் சுவாமி மனு அளித்தார். அதற்கு ஆதாரங்களாக இரண்டு தொகுப்புகள் கொண்ட ஆவணங்களை அளித்திருந்தார்.
நிலக்கரி இறக்குமதி டெண்டர் தொடர்பாகவும், அரசு நிறுவனமான டான்சி நிலத்தை முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் பங்குதாரர்களாக உள்ள ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்குக் குறைந்த விலைக்கு விற்றது தொடர்பாகவும் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார்.
அழகேந்திரன் பிரதர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு நிலக்கரி இறக்குமதி ஒப்பந்தம் அளிக்கப்பட்டிருந்தது. இதில், பொதுப்பணித் துறை செயலாளர் மற்றும் பல்வேறு துறைச் செயலாளர்களின் குறிப்புகள் ஆவணங்களாகத் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஜெயா பப்ளிகேஷனில் முதல்வர் ஜெயலலிதா பங்குதாரராக இருப்பது பற்றிய ஒப்பந்தம், நிலம் வாங்கியதற்கான ஆவணம், 4.42 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் 1.82 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருப்பது பற்றிய விவரம் ஆகியவையும் அளிக்கப்பட்டிருந்தது.
சுப்பிரமணியன் சுவாமி சொன்ன குற்றச்சாட்டுகளையும் அதற்காக அளித்திருந்த ஆவணங்களையும் கவனமாகப் பரிசீலித்த பிறகு, முதல்வர் ஜெயலலிதா மீது இந்திய தண்டனைச் சட்டம் 169-வது பிரிவு, ஊழல் தடுப்புச் சட்டம் 13 (1) D மற்றும் E ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குத் தொடர அனுமதி வழங்குகிறேன்’ என்று சென்னா ரெட்டி அந்த கடித்ததில் குறிப்பிட்டிருந்தார்.
’’லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்படி நான் தொடரப்போகும் இந்த வழக்கில், தாமதங்களைத் தவிர்க்க சிறப்பு நீதிமன்றம் வேண்டும். ஜெயலலிதா மட்டும் இசைந்தால், மூன்றே மாதங்களில் வழக்கை முடித்துவிடலாம்!'' என்று அப்போது சொன்னார் சுவாமி.
இதற்கு ஜொயலலிதாவின் ரியாக்சன் என்ன?...
1995 ஏப்ரல் 1. சனிக் கிழமை முட்டாள்கள் தினத்தில்…
சென்னை சாந்தோம் ஜனதா கட்சி அலுவலகத்தில் சுப்பிரமணியன் சுவாமியின் பிரஸ் மீட்டுக்கு தேதி குறிக்கப்பட்டிருந்தது. ’அதிரடியாக எதையாவது சொல்லி பரபரப்பைக் கிளப்புகிறவர் சுப்பிரமணியன் சுவாமி’ என்பது ஊருக்கே தெரிந்தது. அப்படிதான், ’வழக்கமான அரசியல் செய்தியாக இருக்கும்’ என நினைத்து பத்திரிகையாளர்கள் வந்திருந்தார்கள். ஆனால், அன்றைக்கு சுவாமி சொன்ன தகவல், இந்தியா ஊடகங்களுக்கான தலைப்பு செய்தி !
“முதலமைச்சர் ஜெயலலிதா மீது வழக்குத் தொடர, ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி அளித்துவிட்டார்'' என்ற சிரித்துக் கொண்டே அதிர்ச்சி தகவலைச் சொன்னார் சுப்பிரமணியன் சுவாமி. ’’ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினத்தில் சுவாமி பிரஸ் மீட் நடத்தி, நம்மை ஏமாற்றப் பார்க்கிறார்’’ என நிருபர்கள் கமெண்ட் அடித்தனர். உடனே, சென்னா ரெட்டி கையெழுத்திட்ட அனுமதிக் கடிதத்தின் நகலைச் செய்தியாளர்களிடம் சுவாமி கொடுத்த போது நிருபர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ’ஜெயலலிதா மீது கிரிமினல் வழக்கு. சுவாமிக்கு ஆளுநர் அனுமதி’ என்ற தலைப்பு செய்தி, அனைத்து பத்திரிகைகளிலும் கொட்டை எழுத்துகளில் வெளியானது.
’அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருக்கும் முதல்வர் ஜெயலலிதா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்’ எனச் சொல்லி, 1994 நவம்பரில் ஆளுநர் சென்னா ரெட்டியிடம் மனு அளித்திருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. அந்த மனு மீது சென்னா ரெட்டி நடவடிக்கை எடுக்காத சூழலில், வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார் சுவாமி. அந்த வழக்கில், ’1995 மே மாதத்துக்குள் முடிவை அறிவிக்க வேண்டும்’ என ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்திருந்தது. இதன் தொடர்ச்சியாகத்தான் சென்னா ரெட்டி அனுமதி அளித்தார்.
’’ஜெயலலிதா மீதான வழக்கு நேர்மையாக நடைபெற, முதல்வர் ஜெயலலிதா உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் விலகாவிட்டால் அரசியலில் தூய்மையைப் கடைப்பிடிக்க ஜெயலலிதாவை பதவியில் இருந்து நீக்கப் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவும் நடைபெறவில்லை என்றால் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்வேன்’’ எனப் பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னார் சுவாமி.
’’முதல்வர் ஒரு அரசாங்க ஊழியர். அவர் மீதான புகாரை விசாரிக்க மத்திய, மாநில அரசுகள் நீதிபதியை நியமிக்கலாம். அவரே மாநில முதல்வராக இருப்பதால் மத்திய அரசு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்’’ எனச் சொன்ன சுவாமி, அதற்கு ஆதாரமாக மகாராஷ்டிராவில் நடந்த ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டார். ’’1982-ல் மகாராஷ்டிரா முதல்வர் அந்துலே மீது புகார் வந்தபோது, அவர் மீது வழக்குத் தொடர ஆளுநர் அனுமதித்தார். உடனே அந்துலேவை பதவி விலகும்படி காங்கிரஸ் தலைவராக இருந்த இந்திரா காந்தி கேட்டுக் கொண்டார். இதனால், அந்துலே பதவி விலகினார். ஜெயலலிதா பதவி விலகாவிட்டால் அவரை நீக்கி, சட்டப்பேரவையின் செயல்பாட்டை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும்’’ என்றார்.
ஜெயலலிதா மீது வழக்கு தொடர சுவாமிக்கு சென்னா ரெட்டி அனுமதி அளித்துத் தரப்பட்ட கடிதம் 1995 மார்ச் 25-ம் தேதி எழுதப்பட்டிருந்தது. அது, மார்ச் 31-ம் தேதி சுவாமியின் கைக்குக் கிடைத்தது. அடுத்த நாள் ஏப்ரல் 1-ம் தேதி அதனை ஊடகத்தில் பந்தி வைத்தார் சுவாமி. இரண்டரை பக்கம் கொண்ட அந்த கடிதத்தில் ஆளுநர் சென்னா ரெட்டி என்னதான் சொல்லியிருந்தார்?
’குற்றவியல் நடைமுறை விதி 197-வது பிரிவின் படியும் ஊழல் தடுப்பு சட்டத்தின் 19-வது பிரிவின் படியும் முதல்வர் ஜெயலலிதா மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு, 2.11.1993- ம் தேதி சுப்பிரமணியன் சுவாமி மனு அளித்தார். அதற்கு ஆதாரங்களாக இரண்டு தொகுப்புகள் கொண்ட ஆவணங்களை அளித்திருந்தார்.
நிலக்கரி இறக்குமதி டெண்டர் தொடர்பாகவும், அரசு நிறுவனமான டான்சி நிலத்தை முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் பங்குதாரர்களாக உள்ள ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்குக் குறைந்த விலைக்கு விற்றது தொடர்பாகவும் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார்.
அழகேந்திரன் பிரதர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு நிலக்கரி இறக்குமதி ஒப்பந்தம் அளிக்கப்பட்டிருந்தது. இதில், பொதுப்பணித் துறை செயலாளர் மற்றும் பல்வேறு துறைச் செயலாளர்களின் குறிப்புகள் ஆவணங்களாகத் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஜெயா பப்ளிகேஷனில் முதல்வர் ஜெயலலிதா பங்குதாரராக இருப்பது பற்றிய ஒப்பந்தம், நிலம் வாங்கியதற்கான ஆவணம், 4.42 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் 1.82 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருப்பது பற்றிய விவரம் ஆகியவையும் அளிக்கப்பட்டிருந்தது.
சுப்பிரமணியன் சுவாமி சொன்ன குற்றச்சாட்டுகளையும் அதற்காக அளித்திருந்த ஆவணங்களையும் கவனமாகப் பரிசீலித்த பிறகு, முதல்வர் ஜெயலலிதா மீது இந்திய தண்டனைச் சட்டம் 169-வது பிரிவு, ஊழல் தடுப்புச் சட்டம் 13 (1) D மற்றும் E ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குத் தொடர அனுமதி வழங்குகிறேன்’ என்று சென்னா ரெட்டி அந்த கடித்ததில் குறிப்பிட்டிருந்தார்.
’’லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்படி நான் தொடரப்போகும் இந்த வழக்கில், தாமதங்களைத் தவிர்க்க சிறப்பு நீதிமன்றம் வேண்டும். ஜெயலலிதா மட்டும் இசைந்தால், மூன்றே மாதங்களில் வழக்கை முடித்துவிடலாம்!'' என்று அப்போது சொன்னார் சுவாமி.
இதற்கு ஜொயலலிதாவின் ரியாக்சன் என்ன?...