25 வயதில் கணவன் இறந்துவிட்டான். இரண்டு பெண் பிள்ளையை காப்பாற்ற புளியமரத்தடியில் இரவு டிபன்கடை போட்டாள் ப்ரியா.
கடைபோட்ட அன்னைக்கே ஒரு போலீஸ்காரர் வந்தார்... யார்கிட்ட பர்மிசன் கேட்ட? மணி 11 ஆச்சு கடையை சாத்து... என்று சொல்லி தினமும் ஓசியில வயிறுமுட்ட சாப்பிட்டு சென்றார்.
பணம் குடுத்து சாப்பிடுபவர்கள் இன்னும் ஒரு தோசை அதிகம் கேட்க மாட்டார்களா?... என்ற ஏக்கத்தோடு அவர்களுக்கு பார்த்து பார்த்து பரிமாறினாள் ப்ரியா.
ஆனால் இந்த ஓசிபோலீஸ் ஒருதோசை
குறைவாக சாப்பிடமாட்டானா என நினைத்தாள்... ஆனால் அந்த போலீஸ் ஆற அமர உட்கார்ந்து நிறைய சாப்பிட்டுவிட்டு கடைசியில் பார்சலும் வாங்கிச் சென்றார்.
பிரியாவுக்கு கோபம் வந்தாலும் "என்ன செய்வது? மரத்தடியில் கடைபோட்டால் இப்படித்தான் வருவார்கள்... நம்ம தலைவிதி இதுதான்" என்று நினைத்துக்கொண்டே அந்த ஓசி போலீசுக்கு வேண்டாவெறுப்பாக பரிமாறினாள்.
"எவ்வளவுதான் சுவையாக சமைத்தாலும் டவுனுக்குள் உள்ள கடைகள் மூடிய பிறகுதான் இங்கு நாலு பேர் வருவார்கள்... ஆனால் அதையும் இந்த ஓசி போலீஸ் கெடுத்து விடுகிறானே" என்று மனதிற்குள் திட்டித் தீர்த்தாள்... நாலு வருசம் ஆகியும் பிரியாவால் ஒரு பைசாகூட மிச்சம் பண்ணமுடியலை.
எனவே நான்கு வருடங்களுக்குப் பிறகு தனது சமையல் திறமை மீது நம்பிக்கை வைத்து, கந்து வட்டிக்கு பணம் வாங்கி டவுனுக்குள் ஒரு கடையை வாடகைக்கு பிடித்தாள்.
நாள் முழுவதும் கடை நடத்தியதில் ஒரே வாரத்தில் ப்ரியாவுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. இனி ஓரளவுக்கு தப்பித்து விடலாம். வாடகை, கந்துவட்டி, செலவு போக கொஞ்சமாவது பணம் சேர்த்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் மறுபடியும் அதே ஓசி போலீஸ் உள்ளே வந்தார்....
அவரைப் பார்த்ததும் பிரியாவுக்கு ஆத்திரம் வந்தது.... "வாடி வா, இன்னைக்கு உன்னை நாக்கைப் பிடுங்குற மாதிரி நாலு வார்த்தை நல்லா கேட்கனும்... இப்ப வாடகை கொடுத்துதான் கடை நடத்துறேன்... இனி உனக்கு நான் பயப்படத் தேவையில்லை.. மரியாதையா காசு கொடுத்துட்டு அப்புறம் சாப்பிடுடா" என்று சட்டமாக கேட்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் பிரியா.
கடைக்குள் வந்த போலீஸ் ஒரு பையை அவளிடம் கொடுத்தார், "இந்தாம்மா ப்ரியா, இதுல ஒரு லட்சம் இருக்கு, நாலு வருசமா நான் உன் கடையில சாப்பிட்டதுக்கான பில் தொகை இது... சரியா இருக்குதான்னு பார்த்துக்கொள்... உன் கணவன் என்னுடன் படித்தவன்தான், ஆம்பளை துணை இல்லாம மிட்நைட்டு நேரத்தில் நீ வியாபாரம் பண்றது எவ்வளவு ரிஸ்க் என்பது எனக்குத் தெரியும். உன்னோட பாதுகாப்புக்காகத்தான் நான் தினமும் அங்கே வந்தேன். நான் கொடுக்கும் இந்தப் பணம்தான் உன்னுடைய லாப பணம். மறுக்காமல் இதை வாங்கிக்கொள்" என்று பிரியாவின் கையில் கொடுத்தார்...
சில வினாடிகள் ப்ரியாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... கடைசியாகச் சொன்னாள்...
"உட்காருங்க சார்... சாப்பிடுங்க!"
பெண்களை பூமிக்கு சமமாக சொல்வார்கள். எனவே யார் எப்படி இருந்தாலும் பெண்கள் மட்டும் எப்போதும் பொருமையாகவும், நிதானமாகவும், அதே நேரத்தில் கவனமாகவும் இருக்க வேண்டும். வாழ்க்கையில நமக்கு கிடைக்க வேண்டியது வந்தே தீரும். உழைப்பை மட்டும் விட்டுவிடக் கூடாது...
வாழ்க வளமுடன்!!
கடைபோட்ட அன்னைக்கே ஒரு போலீஸ்காரர் வந்தார்... யார்கிட்ட பர்மிசன் கேட்ட? மணி 11 ஆச்சு கடையை சாத்து... என்று சொல்லி தினமும் ஓசியில வயிறுமுட்ட சாப்பிட்டு சென்றார்.
பணம் குடுத்து சாப்பிடுபவர்கள் இன்னும் ஒரு தோசை அதிகம் கேட்க மாட்டார்களா?... என்ற ஏக்கத்தோடு அவர்களுக்கு பார்த்து பார்த்து பரிமாறினாள் ப்ரியா.
ஆனால் இந்த ஓசிபோலீஸ் ஒருதோசை
குறைவாக சாப்பிடமாட்டானா என நினைத்தாள்... ஆனால் அந்த போலீஸ் ஆற அமர உட்கார்ந்து நிறைய சாப்பிட்டுவிட்டு கடைசியில் பார்சலும் வாங்கிச் சென்றார்.
பிரியாவுக்கு கோபம் வந்தாலும் "என்ன செய்வது? மரத்தடியில் கடைபோட்டால் இப்படித்தான் வருவார்கள்... நம்ம தலைவிதி இதுதான்" என்று நினைத்துக்கொண்டே அந்த ஓசி போலீசுக்கு வேண்டாவெறுப்பாக பரிமாறினாள்.
"எவ்வளவுதான் சுவையாக சமைத்தாலும் டவுனுக்குள் உள்ள கடைகள் மூடிய பிறகுதான் இங்கு நாலு பேர் வருவார்கள்... ஆனால் அதையும் இந்த ஓசி போலீஸ் கெடுத்து விடுகிறானே" என்று மனதிற்குள் திட்டித் தீர்த்தாள்... நாலு வருசம் ஆகியும் பிரியாவால் ஒரு பைசாகூட மிச்சம் பண்ணமுடியலை.
எனவே நான்கு வருடங்களுக்குப் பிறகு தனது சமையல் திறமை மீது நம்பிக்கை வைத்து, கந்து வட்டிக்கு பணம் வாங்கி டவுனுக்குள் ஒரு கடையை வாடகைக்கு பிடித்தாள்.
நாள் முழுவதும் கடை நடத்தியதில் ஒரே வாரத்தில் ப்ரியாவுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. இனி ஓரளவுக்கு தப்பித்து விடலாம். வாடகை, கந்துவட்டி, செலவு போக கொஞ்சமாவது பணம் சேர்த்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் மறுபடியும் அதே ஓசி போலீஸ் உள்ளே வந்தார்....
அவரைப் பார்த்ததும் பிரியாவுக்கு ஆத்திரம் வந்தது.... "வாடி வா, இன்னைக்கு உன்னை நாக்கைப் பிடுங்குற மாதிரி நாலு வார்த்தை நல்லா கேட்கனும்... இப்ப வாடகை கொடுத்துதான் கடை நடத்துறேன்... இனி உனக்கு நான் பயப்படத் தேவையில்லை.. மரியாதையா காசு கொடுத்துட்டு அப்புறம் சாப்பிடுடா" என்று சட்டமாக கேட்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் பிரியா.
கடைக்குள் வந்த போலீஸ் ஒரு பையை அவளிடம் கொடுத்தார், "இந்தாம்மா ப்ரியா, இதுல ஒரு லட்சம் இருக்கு, நாலு வருசமா நான் உன் கடையில சாப்பிட்டதுக்கான பில் தொகை இது... சரியா இருக்குதான்னு பார்த்துக்கொள்... உன் கணவன் என்னுடன் படித்தவன்தான், ஆம்பளை துணை இல்லாம மிட்நைட்டு நேரத்தில் நீ வியாபாரம் பண்றது எவ்வளவு ரிஸ்க் என்பது எனக்குத் தெரியும். உன்னோட பாதுகாப்புக்காகத்தான் நான் தினமும் அங்கே வந்தேன். நான் கொடுக்கும் இந்தப் பணம்தான் உன்னுடைய லாப பணம். மறுக்காமல் இதை வாங்கிக்கொள்" என்று பிரியாவின் கையில் கொடுத்தார்...
சில வினாடிகள் ப்ரியாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... கடைசியாகச் சொன்னாள்...
"உட்காருங்க சார்... சாப்பிடுங்க!"
பெண்களை பூமிக்கு சமமாக சொல்வார்கள். எனவே யார் எப்படி இருந்தாலும் பெண்கள் மட்டும் எப்போதும் பொருமையாகவும், நிதானமாகவும், அதே நேரத்தில் கவனமாகவும் இருக்க வேண்டும். வாழ்க்கையில நமக்கு கிடைக்க வேண்டியது வந்தே தீரும். உழைப்பை மட்டும் விட்டுவிடக் கூடாது...
வாழ்க வளமுடன்!!