Facebox Member•••1
Pallavi Ram
Pallavi Ram
17/4/2020, 10:14 pm
சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது.

இரண்டு கைகளாலும் தலையை சொறியக்கூடாது.

அடிக்கடி வீட்டில் அழுக்கூடாது. இதுவே பீடையை ஏற்படுத்தும். இதனால் வீட்டில் செல்வம் தங்காத சூழ்நிலை ஏற்படும்.

ஒரு இலைக்கு பரிமாறியதில் இருந்து எடுத்து அடுத்த இலைக்கு பரிமாறுவது நல்லதல்ல.

வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வரும்போதும் அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம் போன்றவற்றை கொடுத்து உபசரிப்பது சிறந்தது.

கர்ப்பிணி பெண்கள் தேங்காயை உடைக்கக்கூடாது. தேங்காய் உடைக்கும் இடத்திலும் அவர்கள் இருக்கக்கூடாது.

காரணம் உடைக்கும் அதிர்ச்சியால் ஏற்படும் நுண்ணலைகள் கர்ப்பத்தை தாக்கும் அபாயம் உள்ளது.

மேலும் அவர்கள் எலுமிச்சை பழத்தை அறுத்து விளக்கேற்றக் கூடாது.

பூசணிக்காயை பெண்கள் உடைக்கக்கூடாது.

அதிகாலையில் எழுந்து வீட்டு முற்றத்தில் சாணம் தெளித்து கோலம் இட வேண்டும்.

வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தாலும் அவர்களை வைத்து இதை செய்யாமல் வீட்டு எஜமான பெண்ணே இந்த பணியை செய்யும்போது லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.

கைகளால் அன்னத்தையோ, காய்கறிகளையோ பரிமாறக்கூடாது.

வீட்டில் ஒரு பொருள் இல்லாமல் இருந்தால் அதை கணவனிடம் தெரிவிக்கும் போது அது இல்லை என்ற வார்த்தையை கூறாமல் அந்த பொருள் வேண்டும் என்று கூறி வாங்கிவரச் செய்வது சிறந்தது.

ஆன்மிகத்தில் முக்கிய இடம் வசிக்கும் குங்குமம் அழகு சாதன பொருட்கள் வரிசையிலும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

அழகாக ஆடை அணிந்து இரு புருவங்களுக்கு மத்தியில் நெற்றி வகிட்டில் குங்குமத்தை இட்ட பெண்களை பார்க்கும் போது லஷ்மிகரமாக தோன்றுவதை காணலாம்.

நெற்றியில் குங்குமம் இட்டவர்களை ஹிப்நாட்டிஸம் மெஸ்மெரிஸம் செய்ய முடியாது ஒருவரை அமைதிபடுத்தும் சக்தியும் இதற்கு உண்டு.

படிகாரம் சுண்ணாம்பு தண்ணீர் மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துதான் குங்குமம் செய்ய வேண்டும் இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இரும்புசத்தாக மாறிவிடும் படிகாரம் கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது தொற்றுநோய் கிருமிகளும் நெருங்காது.

மூளைக்கும் உடலின் பிற பகுதிகளுக்கும் செல்லும் நரம்புகளுக்கு நெற்றிவகிட்டில் குங்குமம் இடுவதால் சக்தி கிடைக்கிறது.

மூளைக்கு செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல் அதை கட்டுப்படுத்திக்கூடிய பகுதி நெற்றி அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.

நெற்றியில் குங்குமம் இட்டுக்கொண்டு சூரிய நமஸ்காரம் செய்வதால் தனி பலன் கிடைக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.

சூரியனின் கதிர்கள் நெற்றியில் இட்டுள்ள குங்குமத்தின் மீது படும்போது குங்குமத்துடன் சேர்க்கப்படும் படிகாரம் சுண்ணாம்பு தண்ணீர் மஞ்சள் மற்றும் வைட்டமின் டி அல்ட்ரா கதிர்கள் ஆகியவை ஒன்று சேர்ந்து காந்த சக்தியை உருவாக்குகின்றன.

இதனால் குங்குமம் இட்டுக்கொள்பவருக்கு புதிய பவர் கிடைக்கிறது, குங்குமம் முறையாக தயாரித்தால் தான் இந்த பலன்களை அனுபவிக்க முடியும். கலப்படமான குங்குமத்தை இட்டுக் கொள்வதால் சில பிரச்சினைகள் வரலாம்.

Message reputation : 100% (1 vote)
Facebox Member•••2
Rajesh Varma
Rajesh Varma
18/4/2020, 2:19 pm
நல்ல தகவல்கள். நன்றி தோழி

CREATE NEW TOPIC



Information

தர்மசாஸ்திரம் பெண்களுக்கு

From Facebox ® Global Friendly

Topic ID: 191

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Facebox

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

Site Statistics

Recommended Content

This function is growing...