தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகை தான் ரேவதி. இவர் பாராதிராஜாவின் மண்வாசனை படத்தில் நடிகை தன் திரை பயணத்தை ஆரம்பித்தார். அதன்பின் கமலுடன் புன்னகை மன்னன், ரஜினியுடன் கை கொடுக்கும் கை, விஜயகாந்துடன் என் ஆசை மச்சான் என பல வெற்றி ஹீரோக்களுடன் வெற்றி படங்களை நடித்தார்.இந்நிலையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தும் திடீரென 1986ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
மேலும், தமிழ் சினிமாவை பொருத்தவரையில் திருமணமான நடிகைக்கு வாய்ப்புகள் கிடைப்பது கடினம். எனவே ரேவதியையும் தமிழ் சினிமா ஒதுக்க ஆரம்பித்தது. ரேவதியின் திருமண வாழ்க்கையும் கசப்பான அனுபவமாக இருந்தது. 2002ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்த சுரேஷ் மேனன் – ரேவதி தம்பதியினர் அதன்பின் பத்து வருடங்கள் கழித்து விவாகரத்து பெற்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த ரேவதி, ”என் வாழ்க்கையில் நான் செய்த பெரிய தவறு என் திருமணம் என்றும் இளவயதில் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் என் சினிமா பாதை வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்றும், இன்னும் அதிகமாக நல்ல படங்களில் நடித்திருப்பேன் என்றும் தெரிவித்தார்.
இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக தான் மீண்டும் நல்ல கேரக்டர்கள் வந்து கொண்டிருப்பதால் தமிழ் சினிமாவில் எனக்கென ஒரு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் ரேவதி கூறியுள்ளார்”.
மேலும், தமிழ் சினிமாவை பொருத்தவரையில் திருமணமான நடிகைக்கு வாய்ப்புகள் கிடைப்பது கடினம். எனவே ரேவதியையும் தமிழ் சினிமா ஒதுக்க ஆரம்பித்தது. ரேவதியின் திருமண வாழ்க்கையும் கசப்பான அனுபவமாக இருந்தது. 2002ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்த சுரேஷ் மேனன் – ரேவதி தம்பதியினர் அதன்பின் பத்து வருடங்கள் கழித்து விவாகரத்து பெற்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த ரேவதி, ”என் வாழ்க்கையில் நான் செய்த பெரிய தவறு என் திருமணம் என்றும் இளவயதில் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் என் சினிமா பாதை வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்றும், இன்னும் அதிகமாக நல்ல படங்களில் நடித்திருப்பேன் என்றும் தெரிவித்தார்.
இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக தான் மீண்டும் நல்ல கேரக்டர்கள் வந்து கொண்டிருப்பதால் தமிழ் சினிமாவில் எனக்கென ஒரு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் ரேவதி கூறியுள்ளார்”.